ஓவர் ஆட்டம்.. திருவாரூர் முருகனுக்கு எய்ட்ஸ் இருக்காம்.. விரைந்து பிடிக்க போலீஸ் தீவிரம்
கொள்ளை கும்பல் தலைவன் முருகனை போலீசார் தேடி வருகிறார்கள்
Recommended Video
சென்னை: லலிதா ஜுவல்லரி திருட்டில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகனுக்கு எய்ட்ஸ் நோயாம்! வேனுக்குள்ளேயே திரிவாராம்.. எப்படியோ இன்று இரவுக்குள் முருகனை பிடித்து விடுவதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லலிதா ஜுவல்லரியில் கிலோ கணக்கில் நகை கொள்ளை சம்பவம் நடந்ததும், இதில், வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றே சந்தேகித்தனர்.
சுவரில் இருந்த ஓட்டை, கொள்ளை போன கிலோ கணக்கு நகைகள் இவைகளை வைத்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்களே என்று பலமாக யூகித்தனர்.
ஆனால், சிசிடிவி காட்சியில் நடமாடிய 2 பேரின் செருப்பு வைத்தே, இவர்கள் நம்ம ஊர் காரர்கள்தான், வடமாநிலம் இல்லை என்பதை முடிவு செய்தனர். அதேபோல, கால்நிறமும் வடமாநிலத்தவர் போல இல்லை. இதுதான் போலீசாருக்கு கிடைத்த முதல் துப்பு!
ஓட்டை போடுவதில் முருகன் கில்லாடி.. மணிஹீஸ்ட் பார்த்து லலிதா ஜுவல்லரி கொள்ளைக்கு ஸ்கெட்ச்.. பகீர்!
இதன்பிறகுதான் தனிப்படை அமைத்து கொள்ளையன் மணிகண்டன் சிக்கியது. இதற்கெல்லாம் மூலகாரணம் முருகன்தான் என்று சொல்லி, கொள்ளையடிக்கும் டெக்னிக்குகளை போலீசாரிடம் கக்கி வருகிறான். எப்பவுமே வேனில்தான் சுற்றி வருவானாம் முருகன்.
எப்போது பெரிய அளவு கொள்ளை நடந்தாலும், ஒவ்வொருமுறையும் தனது சொந்த ஊரான சீராத்தோப்புக்கு வந்து சொந்தக்காரர்களுக்கு தேவையான பணத்தை தந்துவிட்டு போவானாம்.
முருகனுக்கு இப்போது உடம்பு சரியில்லையாம்... எய்ட்ஸ் இருக்கிறதாம்.. எப்படியும் இன்று பிடித்துவிடுவோம் என்று போலீசார் தரப்பில் உறுதி தெரிவித்துள்ளனர். முருகன் சிக்கனால்தான் மற்ற சங்கதிகள் எல்லாம் வெளியே வரும்!