அழகுமுத்துக்கோன் தியாகத்தைப் போற்றுவோம்... டிடிவி தினகரன், சீமான் ட்விட்டர் பதிவு!!
சென்னை: அடிமை வாழ்வினை அகற்ற ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த மன்னர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் குருபூஜை நாளில் அவரது தியாகத்தைப் போற்றுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், ''இந்திய விடுதலைப்போரில் அந்நியரின் பீரங்கி குண்டுகளுக்கு மார்பை காட்டி வீரமரணத்தை தழுவிய அந்தப் பெருமகன் தேசத்தின் ஜோதியாக என்றும் திகழ்வார். மாற்றானுக்கு மண்டியிடுவதை விட உயிரை விடுவதே மேல் என்று உணர்த்திச் சென்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார்'' என்று தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தனது பதிவில், ''தன் தாய் நிலத்தை அடிமைப்படுத்தி ஆளத்துடித்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலை முழக்கமிட்டு, மரணத்தின் வாசலை மானத்தோடும் வீரத்தோடும் எதிர்கொண்ட வீரமிகு நமது பாட்டனார் #அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு பெருமிதத்தோடு வீரவணக்கம் செலுத்துவோம்'' என்று பதிவிட்டுள்ளார். மேலும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தன் தாய் நிலத்தை அடிமைப்படுத்தி ஆளத்துடித்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து விடுதலை முழக்கமிட்டு, மரணத்தின் வாசலை மானத்தோடும் வீரத்தோடும் எதிர்கொண்ட வீரமிகு நமது பாட்டனார் #அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு பெருமிதத்தோடு வீரவணக்கம் செலுத்துவோம்!
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) July 11, 2020
ஒரே இரத்தம்! அதே வீரம்!
நாம் தமிழர்! pic.twitter.com/4VPKIc2yot
சீனா பிரச்சினையில் இந்தியாவுக்கு ட்ரம்ப் உதவ மாட்டார்.. அவர் பிளான் வேற.. போட்டு உடைத்த மாஜி அதிகாரி