பல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கட்சி பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ட்வீட்டர் மூலமாக, தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 24, 2019
முன்னாள் மத்திய அமைச்சர் திரு. அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அவர், சிறந்த சட்ட நிபுணராகவும் திகழ்ந்தவர். திரு.அருண் ஜெட்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 24, 2019
பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அவர், சிறந்த சட்ட நிபுணராகவும் திகழ்ந்தவர். திரு.அருண் ஜெட்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.