50% இடஒதுக்கீடு விவகாரம்.. நாடகமாடும் தி.மு.கவுக்கும் கடும் கண்டனம்: டிடிவி தினகரன்
சென்னை: இதர பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசு, மத்திய அரசுக்கு மட்டுமல்ல நாடகமாடும் திமுகவுக்கும் கண்டனம் தெரிவிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கை:
மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இந்த பாதிப்புக்கு காரணமான நிலைப்பாட்டை எடுத்த மத்திய அரசுக்கும், மறைமுகமாக அதற்குத் துணை போன பழனிசாமி அரசுக்கும், 2007 ஆம் ஆண்டு மத்திய அரசில் அங்கம் வகித்த போது இந்த சமூக அநீதியை ஆரம்பித்து வைத்து இப்போது நாடகமாடும் தி.மு.கவுக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்
மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.(1/3) #OBCReservation
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 26, 2020
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்றுவதற்கான சட்டப்படியான நடவடிக்கைகளில் இனியாவது பழனிசாமி அரசு அக்கறையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.