ஒசூர் சட்டசபை தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் வா.புகழேந்தி... நெல்லை வேட்பாளர் அதிரடி மாற்றம்
Recommended Video
சென்னை: ஒசூர் சட்டசபை தொகுதியின் அமமுக வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் அமமுக தனித்து போட்டியிடுகிறது.
இக்கட்சி சார்பில் லோக்சபா மற்றும் சட்டசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்களை 2 கட்டங்களாக தினகரன் வெளியிட்டார். இந்த நிலையில் ஒசூர் சட்டசபை மற்றும் புதுவை எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஒசூர் தொகுதியில் அமமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்தார். அது போல் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அ.ம.மு.க சார்பில் தமிழ்மாறன் போட்டியிடுகிறார்.
கார்த்தி சிதம்பரம் வேட்பாளரா..ப.சி. குடும்பத்தின் மீது மக்களுக்கே வெறுப்பு.. சுதர்சன நாச்சியப்பன்
மேலும் அ.ம.மு.க சார்பில் நெல்லையில் ஞான அருள்மணி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக மைக்கேல் ராயப்பன் அத்தொகுதியில் போட்டியிடுவார் என தினகரன் அறிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளர் புகழேந்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் கர்நாடக மாநில கழக செயலாளராகவும் இருந்துவருகிறார்.