வார்த்தை ஜாலம் நிறைந்த காகிதப்பூ மாலை... பட்ஜெட் குறித்து டிடிவி தினகரன் கருத்து
சென்னை: தமிழகத்திற்கு என தனித்துவமான திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்து தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 4 ஆண்டுகளாக மக்களை கசக்கி பிழிந்த அரசு, தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் வருமானவரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தி இருப்பது மக்கள் பட்ட காயங்களுக்கு சிறு ஆறுதல் என்றும், ஒரு சிலவற்றை தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலம் நிறைந்த காகிதப்பூ மாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Comments
English summary
The lack of any unique plans for Tamil Nadu is disappointing says TTv Dinakaran
Story first published: Friday, February 1, 2019, 16:19 [IST]