சட்டசபையில் இன்று 2 ஸ்பெஷல் .. சிங்கிளாக கெத்து காட்டிய தினகரன்.. பேன்ட் சட்டையில் வந்த கருணாஸ்
சட்டப்பேரவையில் தினகரன், கருணாஸ் இருவரும் கவனத்தை ஈர்த்தனர்.
Recommended Video
சென்னை: ஒத்த ஆளாக சட்டபேரவையில் இன்று கெத்து காட்டி திரும்பி வந்திருக்கிறார் டிடிவி தினகரன்!!
தினகரன் எங்கே பேட்டி கொடுத்தாலும் சரி, பொதுக்கூட்டங்களில் பேசினாலும் சரி, அங்கே ஒரு பஞ்ச் வைத்துதான் பேசுவார்.
இவரது எந்த பேட்டியை எடுத்து பார்த்தாலும், அங்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கண்டிப்பாக இருக்கும் - மற்றவர்களுக்கும் தானாக கிடைக்கும். இதுதான் இவரது ஸ்பெஷாலிட்டியே!
இன்றைக்கும் அப்படித்தான் தினகரன் எல்லோரையுமே தன் பக்கம் ஈர்த்தார். ஆளுநர் உரை இன்று துவங்கியதும் ஒவ்வொருவருவராக உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அப்போது, முகத்தில் தாடியுடன் என்ட்ரி ஆனார் தினகரன்.
148-வது நம்பர்
ஆளுநர் பேச ஆரம்பித்ததுமே வழக்கம்போல் திமுக வெளிநடப்பு செய்தது. கூடவே கூட்டணி கட்சியான காங்கிரசும் வந்துவிட்டது. பிரதான, ஆஸ்தான, முக்கிய, கட்சிகளே வெளிநடப்பு செய்துவிட்ட நிலையில், தனி ஆளாக 148-வது நம்பர் கொண்ட இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்தார் தினகரன்.
உற்று கவனித்தார்
ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என்று எத்தனையோ பேர் இருந்தாலும், அது என்னவோ தெரியவில்லை, தினகரன் மீதே அனைத்து மீடியாவின் கவனமும் இருந்தது. அடிக்கடி ஃபோகஸ் ஆகி கொண்டே இருந்தார். ஆனால் எதையும் திரும்பி பார்க்காமல், ஆளுநர் பேச்சை கடைசிவரை உற்று உற்று கவனித்து கொண்டிருந்தார்.
பஞ்ச் வைத்தார்
எதிர்க்கட்சிகள் எல்லாம் வெளியேறி விட்ட நிலையில், தனியாக உட்கார்ந்து கொண்டு, இப்படி ஆளுநரின் உரையை கடைசிவரை கவனித்ததை, அவையில் எல்லோருமே "நோட்டீஸ்" செய்தார்கள். கடைசியில் தினகரன் அவையின் வெளியே வந்ததும், "ஆளுநர் உரை சம்பிரதாய உரையாக இருந்தது, அவரது உரை அறிவிப்புகள் வானத்திற்கும், பூமிக்கும் உள்ள இடைவெளி போன்றது" என்று ஒரு பஞ்ச் வைத்துவிட்டு போனார்.
வெள்ளை வேட்டி
அதேபோல, நடிகராக இருந்து திடீர் அரசியல்வாதியாக உருமாறியவர் கருணாஸ். திருவாடானையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் வெள்ளை வேட்டி - சகிதம் என்று இறங்கினார். அதற்கு பிறகு கருணாசை நாம் எங்கு பார்த்தாலும் வெள்ளை வேட்டி-சட்டையுடனேதான் பார்க்க வேண்டி வந்தது.
ஒயிட் அண்டு ஒயிட்
ஆனால் இன்றைக்கு கருணாசிடம் அந்த "ஒயிட் அண்ட் ஒயிட்" மிஸ்ஸிங். ஃபுல் ஹாண்ட் சட்டையை இன் பண்ணிக் கொண்டு, ஷேவ் செய்த முகத்துடன் என்ட்ரி ஆன கருணாசிடம் ஏதோ புது தெம்பு தெரிந்தது.