சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்பும், பின்பும் கூறாமல் நடுவில் கூறியதை மாத்திரம் திரித்து பரப்புவது கன்னியமல்ல.. குருமூர்த்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓ.பி.எஸ். பற்றிய கருத்து... குருமூர்த்தி விளக்கம் | Gurumurthy clarifies what he says about OPS

    சென்னை: நான் என்ன கூறினேன் என முழுமையாக கூறாமல் நடுவில் கூறியதை மட்டும் திரித்து பரப்புவது கன்னியமல்ல என குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார்.

    துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேற்று ஓபிஎஸ் குறித்து ஒரு பரபரப்பு கருத்தை பேசியுள்ளார். அதில் நான் கூறியதாலேயே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அப்போது தியானம் மேற்கொண்டார். ஓபிஎஸ் தியானம் செய்ததன் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது, பிரிந்து கிடந்த அதிமுகவை நான்தான் ஒருங்கிணைத்தேன் என குருமூர்த்தி தெரிவித்திருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில் குருமூர்த்தியின் பேச்சு திமிர்வாதத்தின் உச்சம், இவ்வளவு திமிர் கூடாது; நாவடக்கம் தேவை. அதிமுகவின் மீது கைவைத்து வாங்கிக் கட்டிக் கொண்ட வரலாறும் குருமூர்த்திக்கு உண்டு என்றார்.

    நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார்.. குருமூர்த்தி பரபரப்பு நான் கூறியதாலேயே ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்தார்.. குருமூர்த்தி பரபரப்பு

    தனிப்பட்ட முறை

    இதுகுறித்து குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். தொடர் ட்வீட்டுகளில் அவர் கூறுகையில் ஓ பி எஸ் சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை.

    சசிகலா

    சசிகலா

    ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை.

    ஜெயலலிதா

    இதை ஏற்கெனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரை ஏற்ற சசி எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். அதற்கு பதில் கூறும்போது ஓ பி எஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.

    மரியாதை

    எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கன்னியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து என கூறியுள்ளார்.

    English summary
    Tuglaq Editor Gurumurthy clarifies what he says about O Paneer Selvam are misinterpreted. I dont know anyone from ADMK except OPS.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X