பொறாமை புடிச்சவனுங்க.. வாங்கி 2 நாள்தான் ஆகுது.. இப்படி தீயில் கருக வெச்சிட்டானுங்களே!
2 புதிய பைக்குகள் தீயில் எரிந்து கருகியது குறித்து விசாரணை நடக்கிறது
சென்னை: "பொறாமை புடிச்சவனுங்க.. வாங்கி 2 நாள்தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படி தீயை வெச்சு கருக வெச்சிட்டானுங்களே" என்று பம்மல் பகுதி மக்கள் பொருமுகிறார்கள்.
பல்லாவரத்தை அடுத்த பம்மல் மூவேந்தர் நகர் 2-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கண்ணன். சாய்பாபா என்ற டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சீனிவாசன், சதீஷ் என்ற 2 மகன்கள்.
2 நாளைக்கு முன்னாடி, இவர்கள் ஒரு பைக் வாங்கினார்கள். அது ஜாவா 42 என்ற ஃபேமஸ் ஆன பைக். இந்நிலையில், இன்று காலை தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, அந்த பைக் கருகி கிடந்தது. நேற்றிரவு யாரோ இந்த பைக்குக்கு தீயை வைத்துள்ளார்கள்.
அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் 350 வண்டியும் இந்த தீயில் எரிந்து கருகியது. காலையில் பார்த்தபோது இரண்டு வண்டிகளிலும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இந்த தீயை அணைக்க முயற்சித்தும் முடியாததால், தாம்பரம் சானடோரியம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பிறகே அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் ரெண்டு வண்டியுமே முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. இந்த வேலையை யார் செய்தது என தெரியவில்லை.
இரண்டு பைக்கையும் பார்த்து, பொறாமையால் அந்த பகுதியில் உள்ளவர்கள் செய்தார்களா, அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வண்டி பற்றிக் கொண்டு எரிந்ததா என தெரியவில்லை. இதுகுறித்து பம்மல் சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.