ஒரே நாளில்.. ஒரே இடத்தில்.. ஒரே துணியில் அண்ணன்- தம்பி தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் காசிமேடு!
அண்ணன், தம்பி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்
சென்னை: ஒரே நாளில்.. ஒரே இடத்தில்.. ஒரே துணியில் அண்ணன் - தம்பி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தினால் காசிமேடு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர்கள் இருதயராஜ் - ஆரோக்ய ஆகாஷ்.. இருவரும் அண்ணன் - தம்பிகள்.. இருதயராஜுக்கு 29 வயதாகிறது.. ஆகாஷுக்கு 24 வயதாகிறது!
இருதயராஜ் பிடெக் படித்துள்ளார்.. ஆகாஷ் பிஇ படித்துள்ளார்.. இருவரும் ஒரே வீட்டில் குடியிருந்தனர்.. 3வது மாடியில் பெற்றோர் குடியிருக்க.. 2வது மாடியில் இருதயராஜ், 3-வது மாடியில் ஆகாஷ் குடியிருந்தனர். அண்ணன் - தம்பிகளாக இருந்தாலும் இருவரும் ரொம்பவும் நெருக்கமாம்.. நண்பர்கள் போலவே பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆகாஷ் தன்னுடைய நண்பன் ஒருவருக்கு போன் செய்து, "ஹாய் ஃப்ரெண்ட், நான் இந்த உலகத்தைவிட்டே செல்கிறேன். என் குடும்பத்தை நீதாண்டா பார்த்துக்கணும்" என்று சொல்லி உள்ளார்.. இதை கேட்டு அதிர்ந்த அந்த நண்பர், உடனே ஆகாஷுக்கு போன் செய்துள்ளார்.. ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.. அதனால் ஆகாஷின் அண்ணன் இருதயராஜுக்கு போன் செய்து சொன்னார்.. அப்போது இருதயராஜ் அவரது வீட்டில்தான் இருந்தார்.
இதனால் பதறி போன அவரும், உடனடியாக ஆகாஷ் அறைக்கு ஓடினார்... அதற்குள் ஆகாஷ் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு கதறினார்.. அவரை உடனடியாக அவரை மீட்டு பக்கத்தில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார்.. ஆனால் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
ஆஸ்பத்திரியிலேயே கதறி கதறி அழுதார் ஆரோக்கியராஜ்.. தம்பியின் சடலத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.. பிறகு விஷயத்தை பெற்றோரிடம் சொல்ல வீட்டுக்கு வந்தார்.. ஆனால் வீட்டிற்கு வந்தவர் பெற்றோரிடம் போகாமல் நேராக 3-வது மாடிக்கு சென்றார்... ஆகாஷ் தூக்கு போட்டுக் கொண்ட ஃபேனை ரொம்ப நேரமாக பார்த்து நின்றார்.. பிறகு அதே ஃபேனில்.. அதே துணியில்... தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரொம்ப நேரமாக மகனை காணவில்லை என்று தேடியபோதுதான் தூக்கில் தொங்கியது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. தகவலறிந்து காசிமேடு போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.
ஆகாஷ் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.. ஆனாலும் போதைக்கு அடிமையாகிவிட்டார்.. அதனால் சரியாக வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்ததால், விரக்தியின் உச்சத்துக்கு போய் தற்கொலையே செய்து கொண்டுள்ளார். தம்பி மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்த இருதயராஜ், இதை தாங்கி கொள்ள முடியாமல்தான், அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
படித்த பட்டதாரிகள் இப்படி ஒரே வீட்டில்.. ஒரே துணியில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தினால் காசிமேடு பெரும் அதிர்ச்சியில் உள்ளது.