கூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி.. சென்னையில் பரிதாபம்
சென்னை: சென்னை கூவம் ஆற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் பலியாகிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் கடந்த 3ஆம் தேதி திறக்கப்பட்டன. இன்னும் சில பள்ளிகள் விஜயதசமிக்கு அடுத்த நாளான புதன்கிழமை திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கெனவே பள்ளிகள் திறந்த மாணவர்களுக்கு பூஜைக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீப் (8), ரித்தீஷ்குமார் (13).
இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறையை அடுத்து கூவம் ஆற்றின் கரையோரம் சென்று விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் விழுந்து மூழ்கினர்.
பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. பிரசவலியால் துடித்து கர்ப்பிணி பெண் சாவு
இதையடுத்து அவர்களது உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.