சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

15 வயசில் ஒருத்தர்.. 17 வயசில் இன்னொருத்தர்.. பிஞ்சுலேயே திருமணம் செய்து.. கோவை கொடுமை..!

17 வயது சிறுமியை திருமணம் செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

சென்னை:17 வயதே ஆன இளம்பெண் 2 பேரை கல்யாணம் செய்து குடும்பம் நடத்திய நிலையில், அந்த 2 கணவன்களையுமே போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. கடந்த 2018ல் இவருக்கு வீட்டில் கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.. அப்போது ரம்யாவுக்கு வயசு வெறும் 15தான்.

two Coimbatore persons under the pocso act for marrying a 17 year old girl

மாப்பிள்ளை திண்டுக்கல்லில் வெல்டிங் வேலை பார்ப்பவராம்.. வீட்டில் செய்து வைத்த திருமணம் என்பதால், ரம்யாவும் எதையுமே வாய் திறந்து மறுப்பு சொல்லவில்லை.. இதனைத் தொடர்ந்து தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் ரம்யாவின் சொந்தக்காரர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால், வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு உதவியாக ரம்யா அந்த ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருந்தார்.. அப்போது அதே ஆஸ்பத்திரியில் முத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவாவும் விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அந்த நேரத்தில் ஆஸ்பத்திரியிலேயே ரம்யாவுக்கும் சிவாவுக்கும் லவ் வந்துவிட்டது.. ஒருத்தருக்கொருத்தர் செல்போன் நம்பர்களை தந்ததுடன், டிஸ்சார்ஜ் ஆகி வந்தும் நேரில் சந்தித்து பேசி கொண்டனர்.. கள்ளக்காதலும் வளர்ந்தது.

இந்த விஷயம் கணவனுக்கு தெரிந்துவிட்டது.. அதனால் ரம்யாவை கண்டித்துள்ளார்.. இதனால் கோபப்பட்ட ரம்யா, அங்கிருந்து கோபித்து கொண்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. கோவை சரவணம்பட்டிதான் அம்மா வீடு இருக்கிறது.. ஒருநாள் திருந்தி வருவார் என்று நினைத்து கணவனும் விட்டுவிட்டார்.

ஆனால் அடுத்த சில நாட்களில் ரம்யாவை காணோம்.. பல இடங்களில தேடி பார்த்தும் கிடைக்காததால், ரம்யாவின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில்வழக்கு பதிவு செய்த போலீசாரும் ரம்யாவை தேடிவந்தனர்.. அப்போதுதான் கொடைக்கானல் பகுதியில் அவர் இருப்பதாக தெரியவந்தது.

7 தமிழர் விடுதலை- ஆளுநர் முடிவெடுக்கும்வரை அனைவரையும் பரோலில் விடுதலை செய்ய விசிக வலியுறுத்தல் 7 தமிழர் விடுதலை- ஆளுநர் முடிவெடுக்கும்வரை அனைவரையும் பரோலில் விடுதலை செய்ய விசிக வலியுறுத்தல்

விரைந்து சென்ற போலீசார், மஞ்சூர் பகுதியில் லாரி டிரைவர் சிவாவுடன் குடித்தனம் நடத்தி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. ரம்யாவை கடத்தி சென்று அவர் 2-வது கல்யாணம் செய்துள்ளார்.. இதையடுத்து ரம்யாவை மீட்டதுடன், சிவாவை கைது செய்தனர்.. இது சம்பந்தமாக விசாரிக்கும்போது, ரம்யாவுக்கு இப்போதுதான் 17 வயதாகிறது என்பது தெரியவந்தது.

இதையடுத்து வழக்கு ராமநாதபுரம் மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.. பின்னர், 15 வயசிலேயே கல்யாணம் செய்து வைத்த ரம்யாவின் பெற்றோர் முதல் கணவன் மீதும், மற்றும் 17 வயதில் கல்யாணம் செய்து கொண்ட சிவாவின் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், 2 கணவன்களையும் போக்சாவில் கைது செய்து கோவை ஜெயிலில் தூக்கி உள்ளே வைத்துள்ளது!

English summary
two Coimbatore persons under the pocso act for marrying a 17 year old girl
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X