சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அபார்ட்மென்ட்டுக்குள் மசாஜ்.. எப்ப பார்த்தாலும் "கூட்டம்".. அதிரடியாக புகுந்த போலீஸ்.. சென்னையில்!

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் 6 பேர் மீட்கப்பட்டனர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் மசாஜ் சென்டர் நடத்துவதாக கேள்விப்பட்டு, போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.. அப்போதுதான் அந்த இளம் பெண்களை அங்கு கண்டு அதிர்ந்தனர்!

முன்பெல்லாம் மசாஜ் சென்டர்கள் என்றாலே எங்கேயாவது ஓரிரு இடத்தில் நடத்தப்பட்டு வந்தது.. அதுவும் தகுதி வாய்ந்த நபர்களை வைத்து அல்லது மசாஜ் நன்றாக செய்யக்கூடிய அனுபவம் உள்ள நபர்களை வைத்து மசாஜ் செய்து வந்தனர்..

Two people arrested prostitution for the name of Massage

அப்படியே மசாஜ் செய்தாலும், அதற்கு முன் கூட்டியே அனுமதியை வாங்க வேண்டும்.. நிறைய கஸ்டமர்கள் வருவதால், இப்படி ஒரு விதி இருந்தது. ஆனால், இது அப்படியே இப்போது தலைகீழாகிவிட்டது.. மசாஜ் சென்டர்கள் பெரும்பாலும் பாலியல் நடக்கும் இடமாக மாறி விட்டது..

அதேபோல, சில பியூட்டி பார்லர்களிலும் இப்படி மசாஜ் சென்டர்போல இயங்குவதும் உண்டு.. இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வேலை பார்ப்பது வெளிமாநில பெண்கள்.. கணவனால் கைவிடப்பட்டவர்கள்... அல்லது பணத்தாசை காட்டி இழுத்து வரப்பட்டவர்கள் ஆவர்.

இவர்களை தீவிரமாக கண்காணித்து போலீசார் அவ்வப்போது கைது செய்து கொண்டு வந்தாலும், அவர்களையும் மீறி ஆங்காங்கே மசாஜ் சென்டர்கள் நடந்து வருகின்றன.. சில மாதங்களாகவே லாக்டவுன் என்பதால், இந்த சென்டர்களில் வேலை பார்த்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் முறைகேடான மசாஜ் சென்டர்கள் தலைதூக்கி உள்ளன.

சென்னை அடையாறு எஸ்பிஐ காலனியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அதன்படி போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகனை கைது செய்தனர்.. வேல்முருகனுக்கு 32 வயதாகிறது.. 4 பெண்களை வைத்து இந்த மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார்.. இதையடுத்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அந்த இளம் பெண்கள் 4 பேரையும் மீட்டனர்.

அதேபோல, அடையார் காந்தி நகர் பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வரவும், அங்கும் சென்று சோதனை நடத்தினர்.. பொன்னேரி தச்சூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த 27 வயது வெங்கடேசன் இந்த சென்டரை நடத்தி கொண்டிருந்தார்.

அந்த அப்பார்ட்மென்ட்டில் ஒரு வீட்டையே வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார் வெங்கடேசன்.. 2 பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். வெங்கடேசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்டனர். ஒரே நாளில் சென்னையில் அடுத்தடுத்து மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு 6 இளம்பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்!

English summary
Two people arrested prostitution for the name of Massage
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X