சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் நகை வாங்குவது போல் நடித்து நகைகளை அபேஸ் செய்த பெண்கள்! சிசிடிவி காட்சி!

Google Oneindia Tamil News

சென்னை: அம்பத்தூர் பாடி சரவணா ஸ்டோரில் நகை வாங்குவது போல் நாடகமாடி நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவருகின்றனர்.

Recommended Video

    சென்னையில் நகை வாங்குவது போல் நடித்து நகைகளை அபேஸ் செய்த பெண்கள் - சிசிடிவி வீடியோ

    சென்னை பாடியில் பிரபல சரவணா ஸ்டோர் பல் பொருள் அங்காடி இயங்கி வருகிறது.இந்த கடையின் கீழ்தளத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் விற்பனை பிரிவு அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் விற்பனை முடிந்து இரவு கணக்கு சரி பார்க்கும் பொழுது 12 சவரன் செயின் களவு போனது தெரியவந்தது.

    two women who stole jewellery from Padi Saravana store in Ambattur, Chennai

    இதையடுத்து ஊழியர்கள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் நகையை திருடி சென்றது பதிவாகியிருந்தது. இதுகுறித்து அக்கடையின் மேலாளர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நகையை திருடிச் சென்ற இரண்டு பெண்களை தேடி வருகின்றனர். சிறிய நகை வியாபார கடைகளில் நகை வாங்குவது போல் கவனத்தைத் திசைதிருப்பி ஒரு சில திருட்டு நடைபெற்று வந்த நிலையில் பிரபல நகைக்கடை ஒன்றில் நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Police are searching for two women who stole jewelery from Padi Saravana store in Ambattur, Chennai. see the CCTV footage.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X