வரப் போகுது இளைஞர் அணி மாநாடு.. போட்டா போட்டி.. யாருக்கு சான்ஸ் தருவார் உதயநிதி?
Recommended Video
சென்னை: திமுக இளைஞர் அணியின் மாநாட்டை நடத்த உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதை நடத்த நிர்வாகிகளிடையே கடும் போட்டி கிளம்பியுள்ளதாம்.
திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்டு 40 ஆண்டு காலம் ஆகிவிட்டது. அந்த அணிக்கு செயலாளராக மிக நீண்ட காலம் இருந்து வந்தவர் மு.க.ஸ்டாலின். அவருக்குப் பிறகு அவரது மகனிடம் பொறுப்பைக் கொடுத்துள்ளனர்.
திமுக இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி, தனது தந்தையை விட ஒரு படி மேலே உழைத்து இளைஞரணியை பலப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.
சனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்
உதயநிதி மாநாடு
இந்நிலையில் திமுக இளைஞரணி சார்பில் மாநாடு ஒன்றை நடத்த உதயநிதி திட்டமிட்டுள்ளார். இதனை அறிந்துகொண்ட நிர்வாகிகள், எனது மாவட்டத்தில் மாநாடு நடத்தலாம், தூள் கிளப்பிவிடுகிறேன் என உதயநிதியிடம் ஆளாளுக்கு தேதி கேட்டு வருகிறார்கள்.
நடத்த போட்டா போட்டி
மாவட்டச் செயலாளர்கள் மட்டுமன்றி இளைஞரணியில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகளும், உதயநிதியிடம் தேதி பெற போட்டி போட்டு வருகின்றனர். இளைஞரணி துணைச் செயலாளராக உள்ள பைந்தமிழ் பாரி கோவையில் மாநாட்டை நடத்தினால், அசத்தி விடுகிறேன் என உதயநிதியிடம் தேதி கேட்டுள்ளார்.
உதயநிதிக்கு ஆச்சரியம்
அதேபோல், தூத்துக்குடியில் இளைஞரணி மாநாட்டை நடத்தலாம் என ஜோயல் தேதி கேட்கிறார். இப்படி ஆளாளுக்கு போட்டி போட்டு மாநாடு நடத்த விருப்பப்படுவதால் உற்சாகம் அடைந்த உதயநிதி விரைவில் இடம், தேதியை அறிவிக்க உள்ளாராம்.
பலம் காட்டுவார்களா
இந்த மாநாட்டின் மூலம் உதயநிதி தன் பக்கம் திமுக இளைஞர்கள் இருப்பதை காட்ட ஆர்வமாக உள்ளார். அதேபோல, மாநாட்டை நடத்தும் பொறுப்பைப் பெறுவோர், பெரும் கூட்டத்தைக் கூட்டிக் காட்டி உதயநிதி மற்றும் ஸ்டாலின் மனதில் இடம் பிடித்து வருங்காலத்தில் பெரிய பெரிய போஸ்ட்டுகளை இலகுவாக அள்ள ஆர்வமாக உள்ளனராம்.