கடமை தவறாத பேரன்.. பிறந்த நாளில் தாத்தாவிடம் ஆசி பெற்ற உதயநிதி!
சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டிமுன்னாள் முதல்வரும், தாத்தாவுமான கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மரியாதையை செலுத்தினார்.
கடமை தவறாத பேரன் உதயநிதி எனவும், இது எல்லாம் அரசியல் எனவும் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக இளைஞர் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திமுக தொண்டர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை, சினிமா பிரபலங்களும், மற்ற துறையினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பிறந்தநாளையொட்டி உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தாவான, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதையை செலுத்தி, அவரிடம் ஆசி பெற்றார்.
எனது பிறந்த நாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தேன். தமிழினத்தின் விடியலுக்கு முத்தமிழறிஞர் காட்டிய சமூகநீதி பாதையை மனதில் நிறுத்தி இடையறாது உழைப்போம். pic.twitter.com/KftyJGPdya
— Udhay (@Udhaystalin) November 27, 2020
இது தொடர்பாக டுவிட்டரில் படத்துடன் பதிவு போட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தேன். தமிழினத்தின் விடியலுக்கு முத்தமிழறிஞர் காட்டிய சமூகநீதி பாதையை மனதில் நிறுத்தி இடையறாது உழைப்போம் என்று கூறியுளளார்.
டெல்லியை நோக்கி.. வழியெங்கும் போர்க்களம்.. விவசாயிகள்-போலீசார் கடும் மோதல்!
இந்த படத்தை திமுகவினர் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இது தாத்தாவுக்கு பேரன் செய்ய வேண்டிய மரியாதை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேறு சிலர் எல்லாம் அரசியலுக்குத்தான் எனவும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.