திமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வேண்டாம்...உதயநிதியின் அன்புக்கட்டளை
Recommended Video
சென்னை: திமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்த அவர் அங்கிருந்த நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இந்த அன்புக்கட்டளையை பிறப்பித்தார். அண்மையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து திமுக நிகழ்ச்சிகளில் பேனர் வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் குன்னூரில் அதனை சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின், பட்டாசுகள் வெடித்தால் தான் ஆட்களை திரட்ட முடியும் என்றால், அப்படி ஒன்றும் யாரையும் அழைக்கத்தேவையில்லை எனக் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நமது நிகழ்ச்சிகளில் இப்போது நிர்வாகிகள் யாரும் பேனர் வைப்பதில்லை, அப்படியே இந்த பட்டாசுகளை வெடிக்கும் சம்பிரதாயத்தையும் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
காங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்?
தமிழகத்தில் நடைபெறுவது கேடு கெட்ட ஆட்சி என்றும், அந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வந்து ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் எனவும் தெரிவித்தார். அப்போது வேலைவாய்ப்பு கல்வி, உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் எனப் பேசினார்.