சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு!

கவுசல்யாவின் மறுமணம் பெரிய சமூக மாற்றத்தை கொண்டு வரும் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கவுசல்யாவின் மறுமணம் பெரிய சமூக மாற்றத்தை கொண்டு வரும் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

உடுமலைபேட்டை கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Udumalaipettai Kowsalya marriage will create a social reform says Pa. Ranjith

இந்த நிலையில் கவுசல்யா திருமணத்திற்கு இயக்குனர் பா.ரஞ்சித் வரவேற்பு அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேட்டியளித்தார்.

அதில், கவுசல்யாவின் மறுமணம் முக்கியமான நிகழ்வு. அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்து இருக்கிறார்.

தனி நபராக போராடி சங்கரின் கொலைக்கு காரணம் ஆனவர்களுக்கு அவர் தண்டனை வாங்கி கொடுத்துள்ளார். அவரின் போராட்டம் மெய்சிலிர்க்க வைக்க கூடியது. தற்போது அவர் திருமணம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சகோதரி கவுசல்யாவின் திருமணம் தமிழகத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும். சமூகத்தில் இது முக்கியமான மாற்றத்தை உருவாக்கும். இது பெரிய சமூக மாற்றத்தை நோக்கிய அடி என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

English summary
Udumalaipettai Kowsalya marriage will create a social reform says Pa. Ranjith.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X