கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் வருமா? விரிவான திட்ட அறிக்கை ‛ரிட்டன்’ செய்த மத்திய அரசு! என்ன காரணம்
சென்னை: கோவை, மதுரை மாநகருக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மதுரையில் ரூ11,360 கோடியிலும், கோவையில் 10,740 கோடியிலும் மெட்ரோ சேவை தொடங்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்காத மத்திய அரசு மாறுதல் கோரி திருப்பி அனுப்பி உள்ளது.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுப்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

அதன்படி சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக மதுரை, கோவைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான இடம் ஆராயப்பட்டது. மதுரையை பொறுத்தவரை திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 31.93 கி.மீ. தொலைவுக்கு (இதில் 4.65 கிலோமீட்டர் தொலைவு சுரங்கபாதை) மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்படப்பட்டது. மொத்தம் 23 மெட்ரோ நிலையங்கள் அமைக்கும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு என்பது ரூ.11,360 கோடியாகும்.
மறுபுறம் கோவையில் 39 கிலோமீட்டர் தொலைவுக்கு 32 மெட்ரோ நிலையங்களுடன் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டது. அதாவது கோவை அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையும் மெட்ரோ ரயிலுக்கான உயர்மட்ட பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு என்பது 10,740 கோடியாகும்.
இதையடுத்து கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட இருநகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரித்தது. இந்த அறிக்கை தமிழக அரசின் ஒப்புதல் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறுிக்கை என்பது 936 பக்கங்களை கொண்டதாகவும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை என்பது 655 பக்கங்கள் கொண்டதாகவும் இருந்தது.
இந்த திட்ட அறிக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தால் படிப்படியாக மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பி உள்ளது. அதாவது இரு நகரங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையில் சில மாறுதல்களை செய்து அனுப்பும்படி மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications