நீங்க வேணா பாருங்க... கூட்டணிக்கு விஜயகாந்த் வருவாரு.. பியூஷ் கோயலின் அசைக்க முடியாத நம்பிக்கை
சென்னை: பாஜக கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும் என்கிற நம்பிக்கை உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
மத்திய அரசின் கிசான் சம்மன் நிதி திட்ட துவக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதா பிறந்த தினத்தில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைப்பது பெருமையாக உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து ஏற்கனவே சந்தித்து விசாரித்தேன். தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிகவை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
எங்கள் கூட்டணியில் தேமுதிக விரைவில் இணையும். அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதற்கு உரிமை உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக, அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார்.