பிரதமர் வராத பாதையில் வைகோ கருப்பு கொடி காட்டியுள்ளார்... ஹெச்.ராஜா கிண்டல்
சென்னை: பிரதமர் வராத பாதையில் வைகோ கருப்புக்கொடி காட்டியதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, வரும் 10ம் தேதி திருப்பூருக்கும், 19ம் தேதி கன்னியாகுமரிக்கும் பிரதமர் வரும் இடத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவிக்க முயற்சியுங்கள் என்று சவால் விடுத்தார்.
மேலும், அரசியல் காரணங்களுக்காக தூண்டிவிடப்பட்டதன் விளைவாகவே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.
Comments
English summary
BJP National Secretary H. Raja said that Vaiko did not showed a black flag on the way the Prime Minister.
Story first published: Wednesday, January 30, 2019, 16:14 [IST]