வைகோ விசுவாசமற்றவர்.. அரசியல் நாகரீகமற்றவர்.. காங்கிரஸ் தலைவர் அழகிரி பரபரப்பு விமர்சனம்!
மதிமுக எம்பி வைகோ விசுவாசமற்றவர், அரசியல் நாகரீகமற்றவர் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி பரபரப்பு விமர்சனம் வைத்துள்ளார்.
Recommended Video
சென்னை: மதிமுக எம்பி வைகோ விசுவாசமற்றவர், அரசியல் நாகரீகமற்றவர் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி பரபரப்பு விமர்சனம் வைத்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நீக்கப்பட்டது. இது தொடர்பான விவாதத்தில் ராஜ்யசபா எம்பி வைகோ காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி மீது கடுமையாக விமர்சனம் வைத்தார்.
காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சியும் காஷ்மீர் பிரச்சனையில் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று வைகோ குறிப்பிட்டார். இதற்கு தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்ன அறிக்கை
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக எம்பி வைகோ அரசியல் நாகரீகமற்றவர். கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை அவர் விமர்சிக்கிறார். காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டதாக வைகோ பேசியது தவறு. காங்கிரஸ் என்ன துரோகம் செய்தது என்று அவர் கூற வேண்டும்.
என்ன விவாதம்
அவருடன் விவாதம் செய்ய நாங்கள் தயார். வைகோ யாருக்குமே விசுவாசமாக இருந்தது கிடையாது. அவரின் அரசியல் பாதையை கவனிக்கும் எல்லோருக்கும் இது தெரியும். வைகோ தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். நாங்கள் வலிமையான ஏவுகணைகளை அவர் மீது தொடுக்க வேண்டி இருக்கும்.
யார் எதிரி
வைகோவின் எதிரி யார் என்று அவர்கள் கூற வேண்டும். வைகோவின் எதிரி காங்கிரஸ் கட்சியா அல்லது பாஜக கட்சியா என்று அவர் கூற வேண்டும். வைகோ இப்படியே தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்க கூடாது. பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் வைகோ.
என்ன கட்சி
அவர் ராஜ்ய சபா எம்பியாக நாங்களும் ஒரு வகையில் காரணம்.கூட்டணி தர்மத்திற்கு எதிராக அவர் செயல்படுகிறார். 2016ல் ஜெயலலிதாவை வீழ்த்த திமுக முயன்ற போது, அதற்கு எதிராக சதி செய்தவர்தான் வைகோ.
இல்லை
திமுக கட்சிக்கு எதிராக அவர் பலமுறை செயல்பட்டு துரோகம் செய்துள்ளார். அவர்தான் துரோகத்தை பற்றி பேசுகிறாரா, உலகின் அழகிய காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த நேருதான் உங்களுக்கு துரோகம் செய்தவரா?, என்று கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது.