அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? .. வைரமுத்து
சென்னை: எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜாபர்பாத் உள்ளிட்ட இடங்களில் வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் 34 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு உளவுத் துறை காவல் அதிகாரியும் அடங்குவார்.
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் கூறுகையில் எதிராக வாக்களித்தவர்க்கும், நம்பிக்கை தருவதே நல்லரசு.
எதிராக வாக்களித்தவர்க்கும்
— வைரமுத்து (@vairamuthu) February 27, 2020
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.#CAA
அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும் என தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Lyricist Vairamuthu asks how could you give belief for minority people?
Story first published: Thursday, February 27, 2020, 13:39 [IST]