திருவள்ளுவர் அறிவுக்கடல்.. எந்த சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள்.. வைரமுத்து
சென்னை: திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல்; அவரை எந்த சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள் என சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" 'கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?"
"அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்" என கூறியிருந்தது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 2, 2019
நற்றாள் தொழாஅர் எனின்
கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் pic.twitter.com/xBeXs9aXHa
அத்துடன் திருவள்ளுவரின் படம் ஒன்றும் பகிரப்பட்டிருந்தது. அந்த படம்தான் சமூக ஊடகத்தில் கடும் விமர்சனத்துக்குக் காரணமாகி உள்ளது. பாஜக பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்தப் படத்தில், வள்ளுவரின் உடை காவி வண்ணத்தில் தீட்டப்பட்டு இருந்தது.
திருவள்ளுவரின் கை மற்றும் நெற்றியில் திருநீறு பட்டை இருப்பதைப் போலவும் வரையப்பட்டு இருந்தது. இதற்கு பதிலடியாக பாஜக திருவள்ளூவரை அவமதித்து விட்டதாக டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் "திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல். அவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள்" என கவிஞர் வைரமுத்துவும் கண்டித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல்.
— வைரமுத்து (@vairamuthu) November 3, 2019
அவரை எந்தச் சிமிழுக்குள்ளும்
அடைக்கப் பார்க்காதீர்கள்.#Thiruvalluvar