சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே சலாம்–அய்யா கலாம் - வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறினீரே சலாம் அய்யா கலாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவுநாள் கவிதையை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

Vairamuthu poem on Former president Abdul Kalam

அப்துல் கலாமின் நினைவுநாளை ஒட்டி வைரமுத்துவின் கவிதை:

கடல்மீனளந்த குடும்பத்தில்
விண்மீன் அளந்ததும்

ராமேஸ்வரத்தின் சந்திலிருந்து
பால்வீதிவரை பயணமுற்றதும்

இந்தியாவின் பெரியவீட்டில்
ஒரு பிரம்மச்சாரியாய்த் தனிமை காத்ததும்
பெருமையல்ல

அரசியல் ஆழி சூழ்ந்தும்
உப்புக்கறை படியாமல் கரையேறினீரே
அதுதான் அய்யா உங்கள் பெருமை

சலாம்-அய்யா
கலாம்.

இவ்வாறு வைரமுத்து எழுதியுள்ளார்.

Vairamuthu poem on Former president Abdul Kalam

இன்று அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நினைவிடம் இன்று அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.. வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நினைவிடம்

English summary
Here is Vairamuthu's Poem on Former President Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X