வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை.. சந்திரயான் 2 விஞ்ஞானிகளை வாழ்த்திய வைரமுத்து
Recommended Video
சென்னை: சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து விஞ்ஞானிகளுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக ரூ 978 கோடி செலவில் சந்திரயான் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.
அதன்படி கடந்த திங்கள்கிழமை அதிகாலை மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன்கள் கொடுக்கப்பட்டன.
எனினும் கிரையோஜெனிங் எரிப்பொருள் கோளாறால் விண்கலத்தை செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து இன்று சந்திரயான் 2 விண்கலத்தை செலுத்துவதற்காக நேற்றைய தினமே கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைத்துள்ளதால் இந்தியர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.
130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன.
— வைரமுத்து (@vairamuthu) July 22, 2019
“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”.
இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி
இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது.@isro #Chandrayaan2theMoon
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து கூறுகையில் 130 கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன. "வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை". இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது என பாராட்டியுள்ளார்.