100 பாடல்கள் தொகுப்பான நாட்படு தேறல் 4வது முன்னோட்டம்.. வைரமுத்து ட்வீட்
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் 100 பாடல்கள் தொகுப்பான நாட்படு தேறல்-ன் 4-வது முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் வாழ்வில் பாடல்களின் தேவை தீர்ந்து போவதில்லை என வைரமுத்து கூறியிருந்தார். மேலும் தாம் பெரிதும் மதிக்கும் கலைஞர்களில் என் கைக்கெட்டியவர்களோடு கைகோத்தேன். 100 பாடல்கள் - 100 இசையமைப்பாளர்கள் - 100 பாடகர்கள் - 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தில் இறங்கியிருக்கிறேன்.
இந்த நூறு பாடல்களுக்கு 'நாட்படு தேறல்' என்று பெயர் வைத்திருக்கிறேன் எனவும் அறிவித்திருந்தார். இந்த 100 பாடல்கள் தொகுப்பின் முன்னோட்டங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து வெளியிட்ட்டு வருகிறார்.
#நாட்படு_தேறல்#பாடல்கள்_100#Naatpadu_Theral #Songs_100@anthonydaasan pic.twitter.com/enhMuB92b5
— வைரமுத்து (@Vairamuthu) March 2, 2021
இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் 4-வது முன்னோட்டத்தை வைரமுத்து வெளியிட்டுள்ளார். அதில், மேற்கு தொடர்ச்சி மலை எளச்சுப் போகும் பாடலை முழக்க நான் தோன்றியிருக்கிறேன்.. இசையும் குரலும் அந்தோணி தாசன் என பதிவிட்டுள்ளார்.