தமிழக அரசியலே மாறும்.. டெல்லி அளவிற்கு உருவெடுக்கும் வண்ணாரப்பேட்டை.. வலிமை பெறும் போராட்டம் !
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் சிஏஏ எதிர்ப்பு ஷாகீன் பாக் போராட்டம் போல் பெரிய அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்த போகிறது.
Recommended Video
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் சிஏஏ எதிர்ப்பு ஷாகீன் பாக் போராட்டம் போல் பெரிய அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்த போகிறது.
நேற்று முதல்நாள் மாலையில் இருந்து சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அமைதியாக நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் அங்கிருந்த மக்களை கடுமையாக தாக்கினார்கள்
மிக மோசமாக தடியடி நடத்தி போலீசார் அவர்களை கலைந்து செல்ல வைத்தனர். போலீஸ் தடியடியை கண்டித்து தமிழக முழுக்க தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
வண்ணாரப்பேட்டையில் 3வது நாளாக தொடரும் போராட்டம்.. பெருகும் ஆதரவு.. போலீஸ் குவிப்பு.. பதற்றம்!
டெல்லி போராட்டம்
இந்த வண்ணாரப்பேட்டை போராட்டம் அப்படியே டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கு இணையானதாக மாறியுள்ளது. டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் கடந்த 10 நாட்களாக தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். ஷாஹீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை இங்கு தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள்.
ஏன்
இந்தியாவில் நடக்கும் சிஏஏ போராட்டத்திற்கு இது மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் இந்த போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இந்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர்கள் சொன்னது பெரிய சர்ச்சையானது. இது பாஜகவின் தோல்விக்கு வழி வகுத்தது. அங்கு தேர்தலில் இந்த போராட்டம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஒரே மாதிரி
தற்போது வண்ணாரப்பேட்டை போராட்டமும் அதேபோல் மாறியுள்ளது. சென்னையில் மிக முக்கியமான இடத்தில் போராட்டம் நடக்கிறது. அதனால் தேசிய அளவில் இந்த போராட்டம் கவனம் பெற்றுள்ளது. அதேபோல் இந்த போராட்டத்தில் தினம் தினம் பல நூறு பேர் கலந்து கொள்கிறார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் அதிக எண்ணிக்கையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
மிக முக்கியம்
ஷாகீன் பாக் போராட்டம் போலவே பெண்கள் இதிலும் அதிக அளவில் ஈடுபட்டது உள்ளனர். இதனால், இந்த போராட்டம் ஷாகீன் பாக் போலவே தமிழக அரசியலில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வரலாம். கட்சிகளின் அரசியல் கணக்கை மாற்றலாம் என்று கூறுகிறார்கள். ஆம் ஆத்மி இதில் எடுத்த நிலைப்பாட்டை தமிழகத்தில் திமுகவும் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள் .
கண்டிப்பாக மாறும்
இந்த போராட்டம் இப்போதைக்கு முடியாது என்றும் கூறப்படுதுகிறது. ஷாகீன் பாக் போராட்டம் போல இது தொடர்ந்து நடக்கும் என்கிறார்கள். இதனால் மேயர் தேர்தலில் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் வரலாம். அதேபோல் அடுத்த வருடம் சட்டசபை தேர்தலில், பெரிய அரசியல் மாற்றங்கள் இந்த போராட்டம் காரணமாக வரலாம். தமிழகத்தின் அரசியல் முகமே இந்த போராட்டம் காரணமாக மாறலாம் என்கிறார்கள்.