சர்கார் பிரச்சினைக்காக, அரசை பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாரே வரலட்சுமி!
Recommended Video
சென்னை: ஒரு படத்தால் பயப்படும் நிலைமையில் அரசு பலவீனமாக உள்ளதா என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்கார் திரைப்படத்தில் பல வசனங்களை கட் செய்ய அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவரான வரலட்சுமி சரத்குமார், ட்விட்டரில் கூறியுள்ளதை பாருங்கள்.
உண்மையை சொல்லுங்கள், ஒரு படத்தை பார்த்து அஞ்சும் அளவுக்கு இந்த அரசு பலவீனமாகத்தான் உள்ளதா? நிலைமையை நீங்களே மிக மோசமாக்கிக்கொண்டீர்கள். எதை செய்ய கூடாதோ, அதைத்தான் செய்துள்ளீர்கள். வன்முறை போன்ற முட்டாள்த்தனத்திலிருந்து வெளியே வாருங்கள். இது படைப்பு சுதந்திரம். நான் முருகதாசுக்கு ஆதரவு அளிக்கிறேன். இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
Is the government honestly that weak that you are threatened by a movie..?! You’re jus making it worse for yourselves n doing exactly what u r not supposed to do..#vandalising please refrain from such stupidity.. it’s freedom of creativity..#ISupportARMurugadoss #SarkarVsTNSarkar pic.twitter.com/mGywqznkm1
— varu sarathkumar (@varusarath) November 9, 2018