விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன்.. வருண் அதிரடி பேட்டி
நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது 'செங்கோலை' பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தீபாவளி அன்று சர்கார் படம் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதை தன்னுடையது அல்ல, வருணுடையதுதான் என ஒப்புக் கொண்டுள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
மேலும் அவருக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவும் ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் படத்தின் டைட்டில் கார்டில் கதைக்கு நன்றி வருண் என்ற வரிகள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.
பார்த்து செய்யுங்கள் என விஜய் கூறவில்லை- அந்த பெருந்தன்மை எனக்கு பிடித்தது- பாக்யராஜ்
தடை கேட்கவில்லை
இந்த நிலையில் இந்த படத்தின் கதையை எழுதி செங்கோல் என்று பதிவு செய்திருந்த வருண் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில், நான் சர்காருக்கு தடை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை. அங்கீகாரம் கேட்டுத்தான் கோர்ட்டுக்கு சென்றேன். எனக்கான அங்கீகாரம் படத்தில் எனக்கு கிடைத்தால் போதும் என்றுதான் கோர்ட்டுக்கு சென்றேன்.
விஜய் கதை
2004ல் நான் விஜய்க்காக எழுதிய போராட்டம் இது. அவரை மனதில்வைத்துதான் இந்த கதையை எழுதினேன். அவருக்கான படம்தான் இது.
போராட்டம்
என்னுடைய இந்த போராட்டத்திற்கு பின்னால் இருந்தது விஜய்தான். நடிகர் விஜயின் போராட்ட குணம்தான் என்னை போராட தூண்டியது. நான் விஜயை நேரில் சென்று சந்திப்பேன். விரைவில் அவரை சந்திப்பேன்.
விஜய்க்கு பரிசு
விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை' பரிசாக அளிக்கிறேன். நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.