சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் தற்கொலையா? மரணத்தில் சந்தேகம்.. போலீசார் அதிரடி விசாரணை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் மரணம் இயற்கையானது கிடையாது அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrasekar passed away | கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் மரணத்தில் சந்தேகம்.. போலீசார் விசாரணை!

    சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் மரணம் இயற்கையானது கிடையாது அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    தமிழகத்தை சேர்ந்தவரும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான விபி சந்திரசேகர் நேற்று காலமானார். கிரிக்கெட் தொடர்களுக்கு இவர் கடந்த சில மாதங்களாக வர்ணனை செய்து கொண்டு இருந்தார்.

    தமிழக கிரிக்கெட் உலகில் இவர் பெரிதும் அறியப்பட்டவர். விபி சந்திரசேகர் உலக அளவிலும் கிரிக்கெட் உலகில் நிறைய நண்பர்களை கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி கணவனின் காலை கட்டி.. கொதிக்கும் எண்ணெயை ஊற்றி.. மிளகாய் பொடி தூவி.. சுத்தியலால் அடித்த கொடூர மனைவி

    கிரிக்கெட் எப்படி

    கிரிக்கெட் எப்படி

    1988 முதல் 1990வரை இவர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அதன்பின் தமிழக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். விபி சந்திரசேகருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இவருக்கு தற்போது 57 வயதாகிறது.

    மாரடைப்பு

    மாரடைப்பு

    இவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாக செய்திகள் வந்தது. ஏற்கனவே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானதாக கூறப்படுகிறது.

    தற்கொலை என்ன

    தற்கொலை என்ன

    அதே சமயம் இவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வருகிறது. மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டு மாடியில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வருகிறது. ஆனால் இவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விபி சந்திரசேகர் உடல் தற்போது பிரேத பரிசோதனை முடிந்து இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    என்ன விசாரணை

    என்ன விசாரணை

    இந்த மரணம் தொடர்பாக நிறைய சந்தேகங்கள் நிலவி வருவதால் மயிலாப்பூர் போலீசார் இதை விசாரித்து வருகிறார்கள். நேற்று மயிலாப்பூர் போலீசார் விபி சந்திரசேகர் வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    English summary
    VB Chandrasekhar commites suicide? Police started investigation in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X