இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண்.. பாஜக கூட்டணியை சாடிய திருமா!
சென்னை: இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண் என பாஜக கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. சட்டசபை தேர்தலிலும் சரி நாடாளுமன்ற தேர்தலிலும் சரி திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
வட மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண். எனவே, இங்கே சாதி-மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்குத் துணை நிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன என தெரிவித்துள்ளார்.
இந்தமண் தந்தை பெரியாரின் பேருழைப்பால் பக்குவப்பட்ட சமூகநீதி மண். எனவே,இங்கே சாதி-மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்குத் துணைநிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
— Thol.Thirumavalavan (@thirumaofficial) May 24, 2019
தொடக்கம் முதலே திருமாவளவன் பாஜகவை எதிர்த்து வருகிறார். இந்நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணியை சாடும் வகையில் சாதி-மதவெறி சக்திகளுக்கும் அவர்களுக்குத் துணை நிற்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.