சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் ராஜ்பவனில் திருமாவளவன் சந்திப்பு

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்தில் துணைவேந்தர், பதிவாளர் நியமனங்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் வேந்தர் என்றால் அது தமிழகத்தின் ஆளுநர் தான். தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தான் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோர்களை தகுதி அடிப்படையில் அவரே நேரடியாக நியமனம் செய்து வருகிறார்.

vck leader thirumavalavan will meet governor panwarilal prohit on today

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை சந்தித்தார். அப்போது துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி உயர்நீதிமன்றம் பரிசீலிக்க ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் ஆளுநருடன் திருமாவளவன் சந்தித்துள்ளார்.

English summary
vck leader thirumavalavan will meets governor panwarilal prohit at guindy raj bhavan on 5pm today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X