வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு என்னாச்சு..? கேரளாவில் தங்கி சிகிச்சை!
சென்னை: தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் பெரும்பாலோனோர் அண்மைக்காலமாக சிகிச்சைக்காக அண்டை மாநிலமான கேரளாவுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த ஒரு வாரமாக கேரளாவில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடலில் என்ன பிரச்சனை, அடிக்கடி அவர் உடல்நலம் பாதிக்கப்படுவது பற்றி த.வா.க.வட்டாரத்தில் விசாரித்த போது, வேல்முருகன் கடந்த சில மாதங்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறாராம்.
இதனால் முன்பு போல் அவரால் பயணம் மேற்கொள்ளக் கூட முடியவில்லையாம். மேலும், வயிறு உபாதைகளுக்கும் சிகிச்சை பெற்று வருகிறாராம். ஆங்கில மருத்துவம் உரிய பலன் தராததால் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறிவிட்டாராம் வேல்முருகன்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கட்டும்.. கருணாநிதிக்கு இதயப்பூர்வமான அஞ்சலி.. மைத்ரேயன் பரபர பதிவு
ஸ்பாண்டிலிடிஸ் எனப்படும் முதுகு குருத்து வலிக்காக அவர் கேரளாவில் தங்கி சிகிச்சை பெறுவதாகவும், மற்றப்படி பெரியளவில் அவரது உடலில் வேறு பிரச்சனைகள் இல்லையென்றும் கூறப்பட்டது.
இன்னும் ஓரிரு வாரத்தில் வேல்முருகன் வழக்கம் போல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பூரண நலம் பெற வாழ்த்துகள் வேல்முருகன்.