சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹெச்.ராஜாவை கைது செய்யாவிட்டால்... மெரினாவில் குவிந்திடுவோம்... வேல்முருகன் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் ஹெச்.ராஜாவை கைது செய்யவில்லை என்றால் அறிவிப்பின்றி மெரினாவில் குவிந்திடுவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அவர் இதனைக் கூறினார்.

மேலும், நேரம் குறிப்பிடாமல், நாள் குறிப்பிடாமல் மெரினாவில் திரண்டு ஹெச்.ராஜாவை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்துவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.

செம கிளிக்.. மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா.. அவர் இவர்தான் செம கிளிக்.. மோடி எங்கே போனாலும்.. பின்னாடியே போவாரே அவர்.. ஞாபகம் இருக்கா.. அவர் இவர்தான்

கண்டனம்

கண்டனம்

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் சென்னையில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின. அதில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்க

கைது செய்க

நெல்லை கண்ணனை கைது செய்வதில் காட்டிய அக்கறையை ஹெச்.ராஜாவை கைது செய்வதிலும் தமிழக காவல்துறை காட்ட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கல்லூரிக்குள் குண்டு போடுவது உள்ளிட்ட பல ஹெச்.ராஜாவின் பேச்சுகள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மோடிக்கு சேவகம் செய்ய பாரம்பரியமான பொங்கல் பண்டிகை தேதியை மாற்றிவிடாதீர்கள்.. ஸ்டாலின்மோடிக்கு சேவகம் செய்ய பாரம்பரியமான பொங்கல் பண்டிகை தேதியை மாற்றிவிடாதீர்கள்.. ஸ்டாலின்

குவிவோம்

குவிவோம்

ஹெச்.ராஜாவை காவல்துறை கைது செய்யவில்லை என்றால் அறிவிப்பின்றி தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் மெரீனாவில் போராட்டம் நடத்துவோம் என அவர் எச்சரித்தார். நேரம், நாள் தெரிவிக்காமல் பெருமளவில் குவிந்துவிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருமா கருத்து

திருமா கருத்து

பாஜகவினரை கண்டு அதிமுக அச்சம் கொள்கிறதோ என்ற சந்தேகம் தனக்கு எழுந்துள்ளதாகவும், அதிகாரத்தை பறித்து விடுங்கள் என்ற அர்த்தத்தில் தான் நெல்லை கண்ணன் பேசியதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சட்டத்திற்கு முன்

சட்டத்திற்கு முன்

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்றும், பெரியார் குறித்தும், நீதிமன்றம் குறித்து ஹெச்.ராஜா பேசிய போது அவரை ஏன் கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்.

English summary
Velmurugan, Thiruma and others insist on arresting h.Raja
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X