சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெப்பச்சலனம்...வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 நாட்களுக்கு மிக கனமழை

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வெப்ப சலனம் காரணமாக இன்று கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரியில் 9 செமீ மழையும் வால்பாறையில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
பெரியாறு, வாலாஜா, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Very heavy rain for 5 days due to atmospheric overlay circulation

இன்றைய தினம் கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர் ,சேலம், தர்மபுரி ,வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 20ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை ,சிவகங்கை இராமநாதபுரம், தூத்துக்குடி,விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி ,சேலம் ,மதுரை ,திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ,கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

21ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை ,மதுரை ,ராமநாதபுரம், கரூர் ,திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், சேலம், நாமக்கல் ,கள்ளக்குறிச்சி, நீலகிரி ,கோவை, திருப்பூர்,மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வருகின்ற 22ம் தேதி சேலம், நாமக்கல் ,தர்மபுரி ,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மிக கனமழையும், அரியலூர் பெரம்பலூர் ,திருச்சி, கரூர், கடலூர்,விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது! 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் , நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

Recommended Video

    அடித்து ஊற்றிய கனமழை… ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்… மக்களுக்கு வார்னிங்

    இன்று கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    English summary
    The Chennai Meteorological Department has forecast heavy rains in 9 districts of Tamil Nadu today due to global warming. The Met Office said the rains would continue for the next five days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X