ஃபனி புயல் கரையை கடக்கும்போது 205 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் வார்னிங்
சென்னை: ஃபனி புயலால் ஒடிசாவில் 5 மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், 205 கி.மீ வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபனி புயல் மே 3ல் ஒடிசா மாநிலம் கோபால்பூர்க்கும், சந்தபாலிக்கும் இடையே தெற்கு பூரி பகுதிகளில் கரையை கடக்கப்போகிறதாம்.. கரையை கடக்கும் போது 175 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் 205 கிலோ மீட்டர் வேகத்தில் கூட காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபனி புயலால் ஒடிசாவில் 5 மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபனி புயலால் தமிழகத்திற்கு இதுவரை சொல்லிக்கொள்ளும் வகையில், மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#CycloneFani #Alert Extremely Severe Cyclonic Storm Fani likely to hit #Odisha coast between Gopalpur and Chandbali, south of Puri on 3rd May with a wind speed of 175-185 kmph gusting up to 205 kmph.
— NDMA India (@ndmaindia) April 30, 2019
IMD pic.twitter.com/UFJQeZiyjs
ஃபனி புயல் தாக்கம்.. தமிழகத்தையெல்லாம் தாண்டிச் சென்று பெங்களூரில் கொட்டித் தீர்த்த மழை