மருத்துவமனையில் பேராசிரியர் க. அன்பழகனுக்கு தொடர்ந்து சிகிச்சை… மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தொடர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நலக் குறைவால் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு சளி மற்றும் மூச்சு திணறல் காரணமாக 28-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
சளியை அகற்றுவதற்கும், சுவாசத்தை சீராக்குவதற்கும் மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், உடல்நிலையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது உடல்நிலையை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் கேட்டறிந்தனர்.