பச்சை நாயை.. இப்படி வெறி கொண்டு கத்த வச்சுட்டீங்களே.. கோபி, நியாயமா??
திருமுருகன் வசனத்தை கலாய்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: "அந்த நாயே பயந்துடுச்சு"... அப்படித்தான் இருக்கு இப்போ இருக்கிற சீரியல் டயலாக்குகள்!!
ஒரு காலத்தில் அழுது கொண்டே சீரியல் பார்த்தவர்கள் அதிகம். இப்போவெல்லாம் அது மலையேறி போயிடுச்சு சீரியல் மோகம் குறையலேன்னாலும், அடுத்த சீன் என்னவாக இருக்கும் என்பது முந்தைய சீனிலேயே யூகித்து விட முடிகிறது.
அதிலும் ஒரு சில நபர்களையும், அவர்களின் ஃபேமஸ் டயலாக்குகளையும் மக்கள் வாரி கலாய்த்து வருகின்றனர். அப்படி ஒரு சீரியல்தான் கல்யாண வீடு. மெட்டி ஒலி திருமுருகன் நடித்து வரும் சீரியல் இது.
சத்தமாக பேசுகிறார்
கொஞ்ச நாளாகவே இவரது நடிப்பு ட்ரண்ட் ஆகி வருகிறது. நல்லாதான் டயலாக் பேசறார், ஆனா என்ன ஆகுதோ தெரியவில்லை, திடீரென்று சத்தமாக அதே டயலாக்கை வேற மாடுலேஷனில் பேசிவிடுகிறார்.
கோபியுடன் மோதாதே
இதனால் அவர் நடிக்கும் சீரியஸ் வசனங்களை மக்கள் வறுத்தெடுக்கிறார்கள், லவ் சீன்களை கூட லந்து செய்கிறார்கள். இணையத்தில் "கோஸ்ட்டுடன் மோது, கோபியுடன் மோதாதே" என்பது போல பல மீம்ஸ்களை போட்டு அலற விடுகிறார்கள்.
கையெழுத்து போடணும்
இப்போது இதை வைத்து ஒரு வீடியோவே வந்துள்ளது. அதில் ஒருவர் பக்கத்தில் ஒரு பெரிய நாயை உட்கார வைத்து கொண்டு, திருமுருகன் டயலாக் ஒன்றை பேசுகிறார். அதில், "அவன் கேட்டபடி கையெழுத்து போட்டுதான் ஆகணும், போடணும்" என்று சாந்தமாக பேசுகிறார்.
முறைத்து குரைக்கிறது
பிறகு, "போடக்கூடாது" என்று திருமுருகன் போலவே மாடுலேஷன் மாற்றி பேசவும், உட்கார்ந்திருந்த நாய் வெறி கொண்டு கத்துகிறது, கோபத்துடன், அந்நபரை முறைத்து குரைக்கிறது. அந்த நாயே பயந்துடுச்சு மாடுலேஷனை பார்த்து என்பது போல இந்த வீடியோவை தெறிக்க விட்டு வைரலாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.