பரபரப்பான சூழல்.. பயணிகளை முந்தி விமான இருக்கைக்கு சென்ற விமானிக்கு சபாஷ்.. அப்படி என்ன செய்தார்?
Recommended Video
சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் முதல் முறையாக தனது தாய் மற்றும் பாட்டியை அழைத்து கொண்டு செல்லும் விமானி, அதை இயக்குவதற்கு முன்னர் இருக்கைக்கு சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்தவர் பிரதீப் கிருஷ்ணன். இவரை விமானியாக ஆக்கி பார்க்க அவரது தாய், பாட்டி, சகோதரி ஆகியோர் ஆசைப்பட்டனர்.
இவர் சென்னை- சிங்கப்பூர் செல்லும் விமானத்தின் விமானியாக உள்ளார். இவர் 2007-ஆம் ஆண்டு முதல் சுமார் 11 ஆண்டுகளாக விமானியாக பணியாற்றி வருகிறார். மேலும் தனது மகன் இயக்கும் விமானத்தில்தான் முதன்முதலாக பயணிப்போம் என்பது அவர்களது கனவாக இருந்தது.
இனம் இனத்துடன்தானே இணையும்? இவர்கள் ஏழை பங்காளர்களாம்? தமிழிசை யாரை விமர்சிக்கிறார்னு பாருங்க!
புறப்பட தயார்
அந்த கனவு 11 ஆண்டுகளுக்கு பிறகு நனவானது. இரு தினங்களுக்கு முன்னர் இண்டிகோ விமானத்தில் தாய், பாட்டி, சகோதரி ஆகியோர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போது விமானம் புறப்பட தயாராக இருந்தது.
பதிவேற்றம்
அச்சமயம் விமானி அறையிலிருந்து விறுவிறுவென வந்தார் பிரதீப். அப்போது தாய், பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு விமானத்தை இயக்க சென்றார். இதுகுறித்த வீீடியோவை அவரது நண்பர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இதனால் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பெருமிதம்
இந்த தருணம் நிச்சயம் சந்தேகமே இல்லாமல் ஒரு விலைமதிப்பில்லாத தருணமாகும். மகன் தங்களிடம் ஆசி வாங்கிவிட்டு திரும்பிய போது அவர்களது முகத்தில் பெருமிதத்தை பார்க்க முடிந்தது.
வெகுமதி
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பெரும்பாலானோர் இந்த சம்பவம் இதயத்தை தொடுவதாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அந்த தாய் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதால்தான் அதுபோன்ற ஒரு வெகுமதியை பெற்றார்.