தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை.. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் வருமான வரித்துறை தமிழகத்தில் சில இடங்களில் சோதனை நடத்தியது. அதன்பின் தமிழகத்தில் வருமான வரித்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் குறிப்பிடத்தகுந்த சோதனைகளை எங்கும் செய்யவில்லை.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்த சோதனை நடந்து வருகிறது.
மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்யவும், மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கவும் பொருளாகவும் பணமாகவும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இந்த புகாரை அடுத்த தற்போது சோதனை நடக்கிறது.
கடலூர், சென்னை, திருச்சி, தஞ்சையில் அரசு மருத்துவமனைகளில் சோதனை நடக்கறது. முக்கியமாக மகப்பேறு மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்படுகிறது.
200க்கும் அதிகமான அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த சோதனையால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.