நெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல
Recommended Video
சென்னை: "எனக்கு நெயில் பாலிஷ் மாதிரி மை போட்டுவிட்டிருக்காங்க.. நல்லா இருக்கு" என்று வாக்களித்துவிட்டு வெளியே வந்த நடிகர் விஜய் சேதுபதி தனது கை விரலை காட்டி சிரித்தபடியே கூறினார்.
இன்று காலை முதலே பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாக்குகளை கியூவில் நின்று செலுத்தி வருகின்றனர். அதன்படி நடிகர் விஜய சேதுபதியும் கோடம்பாக்கத்தில் உள்ள பூத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல்முறையாக வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உண்மையிலேயே இது ஒரு பெருமையான விஷயம்.
திருவதிகையில் வாக்குப்பதிவு தற்காலிக நிறுத்தம்.. அமமுக சின்னம் பட்டன் உடைந்ததால் பரபரப்பு
உரிமை
ஏன்னா.. 18 வயசில நம் வீட்டில் ஒரு முடிவை எடுக்க நம்ம கிட்ட கேட்பாங்களா இல்லையான்னு தெரியாது. ஆனா இந்த நாட்டில் நம்மை யார் ஆட்சி செய்யணும் என்று முடிவு செய்கிற ஒரு உரிமையை உங்க கிட்ட தந்திருக்காங்க.
நல்லது நடக்கும்
நானும் வாக்களித்துவிட்டேன். மத்தவங்க போலவே நல்லது நடக்கும்-ன்னு நம்பிக்கையில் காத்துக்கிட்டு இருக்கேன். நல்லது நடக்கும்னு.
அரசியல்
எப்படியும் இந்த முறை நிறைய வாக்குகள் பதிவாகும்ன்னு நினைக்கிறேன். ஏன்னா, மக்கள் மத்தியில் அரசியல் குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. ஒருத்தருக்கொருத்தர் அரசியல் பற்றி பேசிக்கிறாங்க.. வாட்ஸ் ஆப், மீம்ஸ் இது மாதிரி அரசியல் அறிவை வளர்த்து கொண்டுள்ளனர். இந்த விஷயத்தை நான் ரொம்பவே பாராட்டறேன்.
வழி தெரியல
நான்கூட வாட்ஸ்அப்பில் வாக்குப்பதிவு இயந்திரம் சம்பந்தமாக வரும் விஷயங்களை பார்த்து கொண்டுதான் இருக்கேன். அதுக்கு என்ன வழி சொல்றதுன்னு தெரியல. ஆனா இது இல்லாமல் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்" என்றார். முன்னதாக, பூத்துக்குள் நுழைந்த விஜய்சேதுபதியிடம் ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு செல்பிக்களை ஆசை தீர எடுத்துகொண்டனர்.