சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Big Boss 4 Promo: கஷ்டப்பட்டு சம்பாதித்த நல்ல பேரை கெடுத்துக்க விரும்பலை - அனிதா சம்பத் அழுகை

பிக்பாஸ் சீசன் 4 இன்றைய புதிய புரமோ வெளியாகியுள்ளது. அனிதா சம்பத் அழுகையோடு பேசுவதை புரமோவாக போட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: எங்க வீட்ல என்னோட பெற்றோர்கள் எனக்கு குழந்தை மாதிரி என்று கூறியுள்ளார் அனிதா சம்பத். ரொம்ப கஷ்டப்பட்டு நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறேன் அதை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் அழுது கொண்டே பேசிய புரமோ இன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ கடந்த ஞாயிறு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. நான்காவது சீசனில் பிக்பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். முதல்வாரமே அமர்களமாக ஆரம்பித்துள்ளது.

அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை கிச்சனில் ஆரம்பித்து பெரிதாக தொடங்கியிருக்கிறது. அனிதா சம்பத்திற்கு முதலில் அதிக ஆதரவு இருந்தது. சுரேஷ் சக்கரவர்த்திதான் தேவையில்லாமல் சண்டை பிடிப்பதாக பார்வையாளர்கள் கருதினர்.

வந்ததில் தேறியது 3 தான்.. ஓடவும் முடியாது.. தாவி தப்பிக்கவும் முடியாது.. பட்டையை கிளப்பும் பிக் பாஸ்வந்ததில் தேறியது 3 தான்.. ஓடவும் முடியாது.. தாவி தப்பிக்கவும் முடியாது.. பட்டையை கிளப்பும் பிக் பாஸ்

அனிதாவின் பேச்சு

அனிதாவின் பேச்சு

அனிதா மீதான ஆதரவு திடீரென மாறி சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஆதரவாக திரும்பியது. சுரேஷ் சக்கரவர்த்தி வயதானவர் என்றும் பார்க்காமல் அவரை பலரும் மரியாதை குறைவாக நடத்துவதாக பார்வையாளர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.

அனிதா ஓவர் பேச்சு

அனிதா ஓவர் பேச்சு

பிக்பாஸ் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே செய்தி வாசிப்பாளர் அனிதாவின் பேச்சு பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவராகவே இருக்கிறது என்பது பார்வையாளர்களின் கருத்து. எடக்குமடக்காக பேசி அவராகவே இப்போது பெயரை கெடுத்துக்கொண்டிருக்கிறார்.

அழுகை புரமோ

அழுகை புரமோ

சுரேஷ் சக்கரவர்த்திதான் ட்டிரிக்கர் பண்றார் அவருக்கு புரமோவில் வரவேண்டும் என்பது ஆசை என்று சொன்ன அனிதா சம்பத் இப்போது தினசரியும் புரமோவில் வருகிறார். இன்றைக்கு முதலில் வெளியான புரமோவில் அனிதாவின் அழுகை காட்சிகள் வெளியாகியுள்ளது.

நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறேன்

நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறேன்

நான் ரொம்ப கஷ்டப்பட்டு நல்ல பெயர் சம்பாதித்திருக்கிறேன் அந்த பெயரை கெடுத்துக்க விரும்பலை என்று கூறியுள்ளார் அனிதா சம்பத். எனக்கு அட்ரஸ் கிடையாது நமக்குன்னு ஒரு வீடு இருந்தா நல்லா இருக்கும் என்று நினைத்தாக கூறியுள்ளார் அனிதா.

என் பெற்றோர்கள் குழந்தை

என் பெற்றோர்கள் குழந்தை

எங்க வீட்ல நான்தான் பெரியவள் மாதிரி இருப்பேன். என்னோட பெற்றோர் தம்பி எல்லாம் குழந்தை மாதிரி. நான் ரொம்ப கஷ்டப்பட்டு என் வாழ்க்கையை கடந்து வந்திருக்கேன். யார் கூடவும் என்னை கம்பேர் பண்ணாதீங்க என்று அழுது கொண்டே கூறியிருக்கிறார் அனிதா. இன்றைய பிக்பாஸ் படு சுவாரஸ்யமாகவே இருக்கும். அனிதாவின் வாழ்க்கை கதையை கேட்கலாம்.

English summary
Anita Sampath has told that my parents are like a child to me at home. "I have earned a good name with great effort and I do not want to spoil it," said Purmo, who spoke with tears in his eyes. The Big Boss reality show airing on Vijay TV has been airing since last Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X