சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர்களை பற்றி பேசினாலே இந்த டயலாக்தான் நினைவுக்கு வருகிறது.. ஸ்டாலின் குறித்து விஜய பிரபாகரன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijaya Prabakaran: ஸ்டாலினை கிண்டல் செய்த கேப்டன் மகன் விஜயபிரபாகரன்- வீடியோ

    சென்னை: வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என்று நான் பேசமாட்டேன். இவர்களை பற்றி பேசினாலே இந்த வார்த்தை தான் ஞாபகம் வருகிறது என்று ஸ்டாலினை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கிண்டல் செய்தார்.

    அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் தேமுதிக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி வடசென்னை, விருதுநகர், திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

    வட சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து சென்னை கொளத்தூரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    விஜயபிரபாகரன்

    விஜயபிரபாகரன்

    முன்னதாக தேர்தல் பணிமனை அப்பகுதியில் திறந்து வைத்தார். பின்பு திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் விஜயபிரபாகரன் ஈடுபட்டார்.

    உதயநிதிக்கு எங்கே எப்படி பேசணும்னு தெரியல.. இப்படியே பேசிட்டு இருந்தால்.. கவலையில் திமுகவினர் உதயநிதிக்கு எங்கே எப்படி பேசணும்னு தெரியல.. இப்படியே பேசிட்டு இருந்தால்.. கவலையில் திமுகவினர்

    சிறப்பு

    சிறப்பு

    அப்போது அவர் பேசுகையில் வடசென்னை என்றாலே திமுக கோட்டை என்கிறார்கள். அந்த கோட்டையை அகற்றுவதே இந்த கூட்டணியின் சிறப்பு.

    காலரை தூக்கிவிட்டு

    காலரை தூக்கிவிட்டு

    அவர்களின் கோட்டையை தகர்த்து நமது ராஜ்ஜியத்தை படைப்பது தான் நமது ஸ்டைல். நான் எம்.எல்.ஏ. என்று காலரை தூக்கி விட்டு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச வரவில்லை. மன்னிக்கவும் அவர்களை பற்றி பேசினாலே இந்த டயலாக்தான் ஞாபகம் வருகிறது என்று கூறியுள்ளார்.

    நாவடக்கம் இல்லாத மகன்

    நாவடக்கம் இல்லாத மகன்

    இதுபோல் தேமுதிக கூட்டணி குறித்து பேசி வந்த போது அதிமுகவுடன் இழுபறி நீடித்தது. அப்போது திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். அப்போது தேமுதிகவுக்கு வாக்கு வங்கியே இல்லை என சில கட்சியினர் பொது வெளியில் பேசினர். இதை கண்டிக்கும் வகையில் தேமுதிகவுக்கு வாக்கு வங்கி இல்லாவிட்டால் ஏன்டா என் வீட்டு வாசல்ல வந்து நிக்கறீங்க என்று விஜயபிரபாகரன் நாவடக்கம் இல்லாமல் பேசியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Vijaya prabakaran criticises MK Stalin by saying his famous dialogue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X