தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்!
Recommended Video
சென்னை: விஜயகாந்துக்கு 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகன்கள் பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்தனர்.
விஜயகாந்தின் 67-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதில் விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சியின் அமைப்பு ரீதியான 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1500 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் எந்திரங்களை வழங்கினார்.
மதிய உணவு
அதை தொடர்ந்து புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவையும் வழங்கினார்.
தம்பதி
குழந்தைகளோடு குழந்தையாக விஜயகாந்தும் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த நிலையில் இன்று கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் நாமக்கல்லை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணம் செய்து வைத்தார்.
விஜயகாந்த்
பின்னர் கட்சியினரின் வாழ்த்துகளை பெற்றார். இதையடுத்து விஜயகாந்தின் மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் சேர்ந்து அவருக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்தனர்.
நாய்கள் வளர்ப்பது
விஜயகாந்துக்கு கார் ஓட்டுவது, நாய்களை வளர்ப்பது என்றால் அலாதி பிரியம். அவரது மகன் விஜயபிரபாகரன் ஏராளமான நாய்களை பராமரித்து வளர்த்து வருகிறார். இவை நாய்களுக்கான போட்டிகளிலும் இடம்பெறுகிறது.