கடைசியில் 'கஜா' ஆயுதத்தை இறக்கியது தேமுதிக... சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம்
Recommended Video
சென்னை: கஜா, வரராறு. கஜா வராறு, சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஜயகாந்த் பிரசாரம் செய்ய மாட்டார் என கூறப்பட்டது.
இன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்!
இந்த நிலையில் தேர்தல் என்றாலே விஜயகாந்த் பிரசாரம் இல்லாமலா என்ற வருத்தம் தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் ஏற்பட்டது. இறுதி கட்ட பிரசாரம் நாளையுடன் ஓய்வடையவுள்ள நிலையில் விஜயகாந்த் வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து விழுப்புரத்தில் அண்மையில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா கூறுகையில் விஜயகாந்த் இன்றும் நாளையும் பிரசாரம் செய்யவுள்ளார் என்று தெரிவித்தார். அதன்படி அவர் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை ஆகிய தொகுதிகளின் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்கள். அவருடைய குரலை கேட்டு தொண்டர்கள் உற்சாகமாக உள்ளார்கள்.