சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்!

தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வந்தவரும், அரசியல் உலகில் தற்போதும் தனக்கென்று தனி இடம் பிடித்து இருப்பவருமான தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கேப்டன் பிறந்த நாள் விழா.. நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!!

    சென்னை: தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வந்தவரும், அரசியல் உலகில் தற்போதும் தனக்கென்று தனி இடம் பிடித்து இருப்பவருமான தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

    தமிழ் திரையுலகில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் கோலோச்சியா காலத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் விஜயகாந்த். முதல் படத்திலேயே போலீஸ் கெட்டப்பில் கவனம் ஈர்த்த நடிகர் விஜயகாந்த், தனக்கேற்று தனி பாணியை அமைத்துக் கொண்டார்.

    கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், வைதேகி காத்திருந்தாள், உளவுத்துறை, ரமணா, புலன் விசாரணை என்று இவர் கொடுத்த ஹிட் படங்கள் ஆயிரம். காஷ்மீர் பற்றி இந்தியா இப்போது பேசினாலும் கூட 20 வருடத்திற்கு முன்பே காஷ்மீர் குறித்து படங்களாக வெளியிட்டு ஹிட் கொடுத்தவர்தான் நடிகர் விஜயகாந்த்.

    சினிமா எப்படி

    சினிமா எப்படி

    சினிமாவில் இவர் எப்படி முத்திரை பதித்தாரோ அப்படித்தான் அரசியலிலும் தனக்கென்று தனி பாணியை அமைத்துக் கொண்டார். ஜெயலலிதா, எம்ஜிஆர் போல விஜயகாந்தும் அரசியல் உலகில் பெரிய மாற்றத்தை சினிமாவில் இருந்து வந்து ஏற்படுத்தி உள்ளார் என்றுதான் கூற வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து அதில் வென்ற கடைசி தலைவராக கூட இவர் இருக்க வாய்ப்புள்ளது.

    எப்படி கிராமம்

    எப்படி கிராமம்

    இவரின் படங்களுக்கு கிராமத்தில் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இவர் கட்சி தொடங்கிய நேரத்திலும் தொண்டர்களாக உடன் இருந்தனர். விஜயகாந்த் கட்சி தொடங்கிய சமயத்தில், அவருக்கு இருந்த வரவேற்பை கிராமத்தில் வசித்த மக்கள் பார்த்து இருப்பார்கள். அதுவரை வீட்டு சுவற்றில் கோலோச்சி இருந்த சூரியனையும், இலையையும் முந்தி முரசு சின்னம் பல இடங்களில் ஆக்கிரமித்தது.

    பெரிய ஆதரவு

    பெரிய ஆதரவு

    எந்த காரணமும் இன்றி, மக்கள் எதையும் எதிர்பார்க்காமல் விஜயகாந்தை ஆதரிக்க தொடங்கினார்கள். பல கிராமங்களில் இப்போதும் அந்த ஆதரவு அப்படியே இருக்கிறது. கருப்பு எம்ஜிஆர் என்று புகழும் அளவிற்கு இவர் பிரபலம் அடைய தொடங்கிய காலம் அது. தமிழக அரசியலில் மிக முக்கியமான தலைவராக மாற போகிறார் என்று பலர் ஆருடம் சொன்ன தலைவர் அவர்.

    எதிர்க்கட்சி

    எதிர்க்கட்சி

    கட்சி தொடங்கிய உடனே இவர் மிகப்பெரிய தலைவராகிவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இவர் தனது கட்சியை வளர்த்தார். மிகவும் அரும்பாடு பட்டுத்தான் இவர் தனது முரசு சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். பெரிய இரண்டு கட்சிகளுடன் சேராமல் தனியாக செயல்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்தார்.

    எதிர்க்கட்சி

    எதிர்க்கட்சி

    இதன் மூலம் அவர் சேர்த்த ஆதரவுதான் அவரை பல இன்னல்களுக்கு மத்தியிலும் எதிர்க்கட்சி தலைவராக்கியது. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அவருக்கு எதிராகவே அமர்ந்து சவால்விட வைத்தது. அதுதான் விஜயகாந்த் அரசியலின் பொற்காலம் என்று கூட கூறலாம். சட்டசபையிலேயே நாக்கை மடித்து, கோபத்தை காட்டி வைரலானார்.

    எப்படி கோபம்

    எப்படி கோபம்

    அதையே பின் ஒரு பேட்டியில் ''இந்த பக்கம் காட்டுனீங்க, அந்த பக்கம் காட்டலையே'' என்று வருத்தமாக உண்மை மறைக்கப்பட்டுவிட்டது என்று புலம்பினார். ஒரு பக்கம் கோபத்துடன் செய்தியாளர்களை திட்டுவார். இன்னொரு பக்கம் அன்போடு பாட்டிகள் மீது கைபோட்டு நலம் விசாரிப்பார். இவர் எப்போது அன்பாக இருப்பார், எப்போது கோபம் வந்து கர்ஜிப்பார் என்று அவருக்கு மட்டுமே தெரியும்.

    சிறப்பு

    சிறப்பு

    இவர் செய்தியாளர்களையும், முக்கியமான சில தலைவர்களையும் சீண்டியதில் இருந்தே நிறைய சிக்கலுக்கு உள்ளானார். ஒரு காலத்தில் அரசியல் மாற்றாக பார்க்கப்பட்டவர் காலப்போக்கில் மீம் டெம்ப்ளேட் ஆக்கப்பட்டார். இணையம் ஒரு அரசியல்வாதியை எப்படி எல்லாம் முடக்க முடியும் என்று இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். இணையத்தில் தொடர்ந்து கலாய்க்கப்பட்டு, பல மீம் பேஜ்களில் ஷேர் செய்யப்பட்டு, பல வாட்ஸ் ஆப் குரூப்களில் இவர் காமெடிக்கள் பரப்பப்பட்டு, அரசியல் உலகில், காமெடியனாக மாறிய அவலமும் நடந்தேறியது.

    எத்தனை சர்ச்சை

    எத்தனை சர்ச்சை

    இவரும் அதற்கு தொடர்ந்து தீனி போட்டுக்கொண்டே வந்தார். தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்க, தூ என்று பத்திரிக்கையாளர்களை சொன்னது என தொடர்ச்சியாக வைரலானார். உலகம் முழுக்க இவர் செய்த யோகா புகைப்படமும் வைரலானது. அப்போது இவர் வசனத்தை வைத்து உருவாக்கப்பட்ட காமெடிக்கள் இப்போதும் வைரலாக வலம் வருகிறது.

    மிஸ் செய்கிறார்கள்

    மிஸ் செய்கிறார்கள்

    ஆனால், மக்கள் இப்போது அரசியலில் இவரின் இன்மையை வெகுவாக உணர்ந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தமிழக அரசியலில் கொஞ்சமும் கள்ளங்கபடமற்ற அரசியல்வாதி என்று இவரை கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். தீவிர அரசியலில் இவர் இல்லாததும், இவரின் மேடை பேச்சுக்கள் இல்லாததும், இவரின் செய்தியாளர் சந்திப்பு நடக்காததும் மக்களை இப்போதுதான் இவரை ''மிஸ் செய்ய'' வைத்துள்ளது.

    குழந்தை சார்

    குழந்தை சார்

    இவர் அரசியலில் ஆக்ட்டிவ் இல்லாமல் போனதை திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவின் போதுதான் எல்லோரும் உணர்ந்தனர். கருணாநிதிக்காக, எல்லோரும் போல அல்லாமல், மனது உடைந்து பேசிக்கொன்டே இருக்கும்போதே உடைந்து அழுத கேப்டனை பார்த்த போது, எல்லோரும் மனமும் இளகி இருக்கும். அதுவரை லெப்ட் லெக்கை சுவற்றில் வைத்து ரைட் லேக்கை எதிரியின் முகத்தில் வைத்த விஜயகாந்தைதான் மக்களுக்கு தெரியும். அப்படிப்பட்டவரை குழந்தையாக அழுது பார்த்த பலர் மனமுடைந்தனர்.

    என்ன ஷாக்கிங்

    என்ன ஷாக்கிங்

    அதன்பின் அவரை கருணாநிதியின் சமாதியில் பார்த்தவர்கள் இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். நடக்க முடியாமல், கம்பியை பிடித்து நடந்தவரை பார்த்தவர்களுக்கு பெரிய கலக்கமே ஏற்பட்டு இருக்கும். என்னாச்சு அந்த கேப்டனுக்கு என்று எல்லோரும் நினைக்கும் வகையில் உடைந்து போய் இருந்தார். தனது உடல் பிரச்சனைகளுக்கு அவர் இப்போதும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    நேற்று எப்படி

    நேற்று எப்படி

    அதிலும் நேற்று தேமுதிக விழாவில் விஜயகாந்த் தவறி விழுந்த சம்பவமும், நாள் முழுக்க பேசாமல் அமைதியாக இருந்ததும் பலருக்கும் பெரிய அதிர்ச்சியை தந்தது. ஏற்கனவே கட்சி செய்த தவறுகளால் தொண்டர்கள் பெரும் விரக்தியில் இருக்கிறார்கள் . தேமுதிக கட்சி பணிகளை பெரும்பாலும் அவரது மச்சான் சுதீப்தான் கவனித்து வருகிறார்.

    மிக மோசம்

    மிக மோசம்

    இந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் தேமுதிக செய்த சில தவறான முடிவுகள் அந்த கட்சியை பாதாளத்திற்கு தள்ளி இருக்கிறது. வாக்கு வங்கியையும் இழந்து கஷ்டப்பட்டு வாங்கிய முரசு சின்னத்தையும் கூட அந்த கட்சி இழந்து நிற்கிறது. இந்த இக்கட்டான நிலையில் தேமுதிகவும், தமிழக அரசியலும் கண்டிப்பாக விஜயகாந்தை மிஸ் செய்கிறது என்று கூறலாம்.

    பன்னீர் செல்வம்

    பன்னீர் செல்வம்

    ''பழைய செல்வமா இருந்திருந்தா என் கை ஓங்குறதுக்கு முன்னாடி உன் கை அதை தடுத்து இருக்கும், நீ பழைய செல்வம் இல்லை, பழைய வேகம் இல்லை. போ இந்த பன்னீர் செல்வம் எங்களுக்கு தேவையில்ல, வரணும் பழைய பன்னீர் செல்வமா வரணும்..'' சத்ரியன் படத்தில் விஜயகுமார், விஜயகாந்தை பார்த்து சொல்லும் வசனம் தமிழகம் முழுக்க பிரபலம். விஜயகாந்தின் தற்போதைய நிலையை இந்த வசனத்தை வைத்து சொல்லலாம்.

    வருவார்

    வருவார்

    இந்த வைரலான வசனத்தை, 70ஸ், 80ஸ், 90ஸ் குழந்தைகள் யாருக்கே மறக்க மாட்டார்கள். அதேபோல்தான் தற்போது நிஜ வாழ்க்கையிலும் விஜயகாந்த் மீண்டும் வர வேண்டும் என்று பலர் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. சீக்கிரம் திரும்பி வாங்க கேப்டன்.. ஹாப்பி பார்த்டே!

    English summary
    DMDK chief Vijayakanth celebrates his 67th birthday today: A small tribute.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X