சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயகாந்த் பூரண நலம்.. காலையிலேயே மருத்துவமனையில் வந்த நல்ல செய்தி.. தொண்டர்கள் உற்சாகம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாஆகியோரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த சில நாளில் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான, பிரேமலதா விஜயகாந் துக்கும் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது.

vijayakanth health is improved, discharged today

அவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருவரது உடல் நிலை சீராக இருந்து வந்ததாக மருத்துவமனை அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஆகிய இருவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

vijayakanth health is improved, discharged today

இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக்குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்... மனைவி மெலானியாவுக்கு கொரோனா பரிசோதனை!! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்... மனைவி மெலானியாவுக்கு கொரோனா பரிசோதனை!!

இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

English summary
DMDK leader vijayakanth and his wife Premalatha, who were suffering from corona infection, are being discharged today as their physical condition has improved, miot Hospital said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X