சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழைய பன்னீர்செல்வம்.. மீண்டும் தேர்தல் களத்தில் விஜயகாந்த்.. தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!

நாளை வடசென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என வடசென்னை தேமுதிக தேமுதிக நாடாளுமன்ற வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijayakanth Election Campaign : தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜயகாந்த்

    சென்னை: நாளை வடசென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்வார் என வடசென்னை தேமுதிக தேமுதிக நாடாளுமன்ற வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.

    வடசென்னையில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சியான தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் வியாசர்பாடி பகுதியில் இரு சக்கர வாகன பேரணி நடத்தி வாக்கு சேகரித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் கட்சியினர் கொடிகளை கட்டி வியாசர்பாடியில் துவங்கி முல்லை நகர் சத்தியமூர்த்தி நகர் மகாகவி பாரதி நகர் என பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தனர்.

    அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்பட 4 தொகுதி இடைத்தேர்தலில் நடுவிரலில் மை! அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்பட 4 தொகுதி இடைத்தேர்தலில் நடுவிரலில் மை!

    வடசென்னை தேமுதிக வேட்பாளர்

    வடசென்னை தேமுதிக வேட்பாளர்

    அப்போது பேசிய வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ், வடசென்னையில் எனக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர்கள் என்னை பார்த்து பயப்படுகின்றனர். அதனால்தான் ஒரு குறிப்பிட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்பி விடுகின்றனர்.

    லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

    விமர்சனங்கள் இல்லை

    விமர்சனங்கள் இல்லை

    நான் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளேன். ஒரு சதவீதம் கூட என் மீது இதுவரை தவறான விமர்சனங்கள் வந்தது கிடையாது. திமுகவிற்கு தோல்வி பயம் வந்து விட்டதால் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். வடசென்னையில் அனைத்து பகுதியிலும் வாக்கு சேகரித்து முடித்துவிட்டோம்.

    திங்கட்கிழமை எப்போது

    திங்கட்கிழமை எப்போது

    ஒரு சில இடங்கள் விடுபட்டுள்ளன அவற்றையும் இரண்டு ஒரு நாளில் முடித்து விடுவோம். திங்கட்கிழமை 15 ம் தேதி மாலை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வடசென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். தற்போது எடுக்கப்பட்டு வரும் கருத்து கணிப்புகள் கருத்து திணிப்புகளாகவே உள்ளன.

    கருத்து கணிப்பு

    கருத்து கணிப்பு

    மக்களுடைய கணிப்பு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மக்களிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது. எங்களது கூட்டணி மெகா கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார்
    மோகன்ராஜ் தெரிவித்தார். இந்த பேட்டியால் தற்போது தேமுதிக தொண்டர்கள் பெரிய உற்சாகத்தில் உள்ளனர்.

    English summary
    DMDK chief Vijayakanth will do election campaign for DMDK tomorrow in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X