தனிப்பெரும்பான்மையுடன் 2ம் முறை பிரதமராகிறார்... நரேந்திர மோடிக்கு விஜயகாந்த் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: இரண்டாவது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது பாரதிய ஜனதா கூட்டணி. சுமார் 300 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவெடுத்துள்ளது பாஜக.
எனவே இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி. அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு இரண்டாம் முறையாக பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு தனது இதயமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக, பாரதிய ஜனதா, அதிமுக கூட்டணி இடம்பெற்று தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.